பிழையை சரி செய்ய 3 முறை முயன்றார் நீதிபதி குமாரசாமி.. தடுத்தார் தலைமை நீதிபதி?
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் ஏற்பட்டுள்ள கணித பிழையை கூட நீதிபதி குமாரசாமி திருத்த முடியாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்து நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட கடன் தொகை கூட்டலில் தவறு இருப்பதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா தெரிவித்தார். இதை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்ய கர்நாடக அரசுக்கு ஆச்சாரியா சிபாரிசு செய்துள்ளார்.

அதிகாரம் உள்ளது
இந்நிலையில், சட்ட வல்லுநர்கள் கருத்துப்படி, கணித தவறை திருத்த ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமிக்கு உரிமையுள்ளது என்று கூறப்பட்டது. அதே நேரம் தீர்ப்பை மாற்ற முடியாது என்றும் கூறப்பட்டது. மற்ற வழக்குகளை ஒப்பிடும்போது, இந்த வழக்கில், ஒரு பெரிய வித்தியாசம் இருப்பதால், கணித தவறையும் சரி செய்ய முடியாத நிலையில் குமாரசாமி இருந்தார்.

தவறை சரி செய்தாலும்..
அதாவது, கணித தவறை சரி செய்தால், தீர்ப்பே தவறு என்ற சூழ்நிலை உருவாகிவிடும். ஏனெனில், கணக்கை சரி செய்தால், ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக 75.76 சதவீதம் சொத்து குவித்ததாக நீதிமன்றம் கூறியதாகிவிடும். அப்படி சொத்து குவித்தவரை எப்படி விடுதலை செய்யலாம் என்ற கேள்வியும் எழுந்துவிடும்.

வழக்கறிஞர் வருகை
இந்நிலையில்தான், தீர்ப்பின் தவற்றை சுட்டிக் காட்டி சரி செய்ய கோருவதற்காக, உச்சநீதிமன்ற வழக்கறிஞரான கிருஷ்ணமூர்த்தி, இன்று ஹைகோர்ட் வந்தார். இவர் இரு நாட்கள் முன்பே வர இருந்ததாகவும், அதிமுகவினர் கடத்தி சென்றதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவராகும்.

3 முறை முயற்சி
உயர்நீதிமன்ற பதிவாளர் பாட்டீலிடம் புகார் கொடுக்க வந்த கிருஷ்ணமூர்த்திக்கு ஹைகோர்ட்டில் வேறு மாதிரியான தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து அவரே கூறியதாவது: தீர்ப்பின் கூட்டலில் தவறு இருப்பது தெரிந்து, நீதிபதி குமாரசாமி, தீர்ப்பை திருத்த 3 முறை முயன்றதாகவும், ஆனால் ஹைகோர்ட் தலைமை நீதிபதி வகேலா, தீர்ப்பை திருத்த கூடாது என்று கூறிவிட்டதாகவும் கோர்ட்டில் என்னிடம் தெரிவித்தனர்.

தீர்ப்பே மாறிவிடுமே
ஏனெனில், கூட்டல் கணக்கை திருத்தினால், தீர்ப்பையே திருத்த வேண்டிவரும் என்பதால், தீர்ப்பை திருத்தும் அதிகாரம் ஹைகோர்ட்டுக்கு இல்லை என்பதை சுட்டிக் காட்டி, தலைமை நீதிபதி இவ்வாறு கூறியுள்ளார். எனவே நானும் இதுகுறித்து ஹைகோர்ட்டில் புகார் கொடுத்து பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

சந்திக்க மறுப்பு?
இந்த விவகாரம் குறித்து, நீதிபதி குமாரசாமி தலைமை நீதிபதியை சந்திக்க முயன்றதாகவும், ஆனால், அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகவும், தீர்ப்பை மாற்ற அனுமதி இல்லை என்பதை மட்டும் அழுத்தமாக கூறிவிட்டதாகவும் ஹைகோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, தீர்ப்பையோ, கணித தவறையோ இனி சுப்ரீம்கோர்ட்தான் மாற்றி எழுத வேண்டிவரும் என்று தெரிகிறது.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications