முத்தலாக் வழக்கு சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்.. மே 11 முதல் விசாரணை
டெல்லி: முத்தலாக் வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே 11ம் தேதி முதல் இந்த விசாரணை நடைபெற உள்ளது.
முஸ்லிம்களிடையே வழக்கத்திலுள்ள முத்தலாக் விவகாரத்து, பலதார மணம் உள்ளிட்ட நடைமுறைகள் இந்திய சட்டப்படி செல்லுபடியாகுமா என்று கேள்வி எழுப்பி அதே சமூகத்தை சேர்ந்த பெண் ஷாய்ரா பானு மற்றும் வேறு சிலர் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமந்றம் மத்திய அரசிடம் பதில் கேட்டது.

இதையடுத்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஒரு பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், முத்தலாக், பலதார மணம் உள்ளிட்ட நடைமுறைகளை எதிர்ப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்திய அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள பாலினச் சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை, சர்வதேச மரபுகள், முஸ்லிம் நாடுகளின் நடைமுறையில் உள்ள திருமண சட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு கருத்து கூறியிருந்தது.
ஆனால், முத்தலாக் விஷயத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு கோருவது, தங்கள் மதத்தின் சுதந்திரத்தில் தலையிடுவதை போல உள்ளது என அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் விமர்சனம் செய்தது. மேலும், முத்தலாக் விஷயத்தில் திருத்தம் செய்வது, புனித குர்ஆனில் திருத்தம் செய்வதற்கு சமம், என்பதால் அதற்கு வாய்ப்பில்லை என வாதிட்டது. ஜாமியத் உலமா-இ-ஹிந்த் என்ற ஒரு முஸ்லிம் அமைப்பும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், அரசியல் சாசன அமர்வு இந்த விவகாரத்தை விசாரிப்பதே சரியாக இருக்கும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அரசியல் சாசன அமர்வில் மே 11ம் தேதியிலிருந்து விசாரணை தொடங்கும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications