சோறுபோட்டு மாளவில்லை.. சிறைகளிலுள்ள 407 இந்தியர்களை தாயகம் அனுப்புகிறது இங்கிலாந்து
லண்டன்: இங்கிலாந்து சிறையில் உள்ள கைதிகளை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ள நிலையில் இதற்கான ஒப்பந்தம்போடப்பட உள்ளது.
இங்கிலாந்தில் உள்ள சிறைகளில் வெளிநாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்து 127 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் 2,233 பேர் உள்ளனர்.

அதிகபட்சமாக பாகிஸ்தானை சேர்ந்த கைதிகள் 509 பேர் அங்கு சிறையில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவை சேர்ந்த 407 கைதிகள் இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளை பராமரிப்பதற்கும், சாப்பாடு கொடுப்பதற்கும் ஆகும் செலவு அதிகரித்து வருவதால், வெளிநாடுகளை சேர்ந்த கைதிகளை அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப இங்கிலாந்து அரசு முடிவு செய்தது.
அதன்படி, ஜமைக்கா நாட்டை சேர்ந்த 300 கைதிகளை அந்தநாட்டிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிறையில் உள்ள இந்திய கைதிகளை இந்தியா அனுப்ப இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உத்தரவை அடுத்து, அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடத்தப்பட்டு வருகிறது. கைதிகளை அனுப்புவது குறித்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், அங்குள்ள இந்திய கைதிகள் தாயகம் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
நான்கு வருடங்களுக்கும், அதற்கு மேல் தண்டனை பெற்ற கைதிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications