Bihar Exit Poll: பீகாரில் பாஜக கூட்டணிக்கே ஆட்சி அரியணை.. காங்கிரஸ் - தேஜஸ்விக்கு பின்னடைவு.. டிவி ரிசர்ச் சர்வே
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு (Bihar Exit Poll Results 2025) முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், பாஜக - நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என டிவி ரிசர்ச் (DV Research) கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. 137 முதல் 152 தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.
காங்கிரஸ் - தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 83 - 98 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 2 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல்
பீகாரில் முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரின் ஆட்சிக்காலம் வரும் 22 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே தேர்தல் ஆணையம் பீகார் சட்டசபைக்கான தேர்தல் தேதியினை அறிவித்தது. இதன்படி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில், முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மீதம் உள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
பாஜக கூட்டணியே வெற்றி பெறும்
இதில், டிவி ரிசர்ச் (DV Research) வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவில் நிதிஷ் குமார் - பாஜக கூட்டணியே வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் - தேஜஸ்வி யாதவ் கட்சி தோல்வியடையும் என கணித்துள்ளது. 137 முதல் 152 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெறும்.
காங்கிரஸ் - தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 83 -98 தொகுதிகளில் வெற்றி பெறும். பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 2 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மற்றவை 1 -8 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என கணித்துள்ளது.
DV Research - கருத்துக்கணிப்பு முடிவுகள்:
* என்.டி.ஏ கூட்டணி: 137 - 152 தொகுதிகள்
* இந்தியா கூட்டணி: 83 - 98 தொகுதிகள்
* ஜன் சுராஜ்: 2 - 4 தொகுதிகள்
* மற்றவை: 1 - 8 தொகுதிகள்
வெள்ளிக்கிழமை தேர்தல் முடிவு
பீகாரில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும் என்பதால், எளிதில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதே இந்த கருத்துக்கணிப்பின் முடிவாக தெரிகிறது. இதனால் பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. எனினும் இது வெறும் கருத்துக்கணிப்பே என்பதால், வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஓட்டு எண்ணிக்கையிலேயே உண்மையாக யார் வெற்றி பெறுவார் என்பது தெரியவரும். பொறுத்திருந்து பார்க்கலாம்..
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications