சமன்வே பாஷா சம்மன் விருதைத் தட்டிச் சென்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் "மாதொருபாகன்”!
சென்னை: தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் சர்ச்சைக்குள்ளான எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய "மாதொருபாகன்" என்ற நாவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நாவலில், திருச்செங்கோடு மக்களின் வாழ்க்கை முறை பற்றி அவதூறு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரச்சினை எழுந்தது. மேலும், அக்கோவில் இறைவன் பற்றியும் தவறாக பதிவிடப்பட்டுள்ளதாக பெரும் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் கடும் எதிர்ப்பையடுத்து தனது நாவலில் அந்த ஊரைக் குறிப்பிட்டு எழுதியதற்காக மன்னிப்பு கேட்டதுடன், இனி எழுதப்போவதில்லை என்றும் அறிவித்தார். இந்த நிலையில், பெருமாள் முருகனுக்கு சமன்வே பாஷா சம்மன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய நூல்களுக்கு அகில இந்திய அளவில் "சமன்வே பாஷா சம்மன்" என்னும் இந்த உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் நேற்று நடந்த 4 ஆவது இந்திய மொழிகள் திருவிழாவில் கே.சச்சிதானந்தன் தலைமையில் சச்சின் கேத்கர், மங்கலேஷ் தாப்ரல், மித்ரா புகன், அருந்ததி சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழு சமன்வாய் பாஷா விருதுக்கு மாதொருபாகன் நாவலுக்காக பெருமாள் முருகனை தேர்வு செய்தது.
நவம்பர் மாதம் 26 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்திய மொழிகளுக்கான திருவிழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. சர்ச்சைக்குள்ளான மாதொருபாகன் நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், "மாதொருபாகன் நாவலுக்கு வழங்கப்பட உள்ள விருது மாபெரும் பழமை வாய்ந்த இலக்கியங்களை கொண்ட தமிழ் மொழிக்கு கிடைத்துள்ள நவீன அங்கீகாரம்." என்று எழுத்தாளர் பெருமாள் முருகன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் மழை! கருமேகம் சூழ்ந்து மரங்கள் அசைந்தாடி! குளிர்ந்த காற்றுடன் இடி சப்தமும் கேட்குது! -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications