ஹைட்ரோகார்பன் திட்ட பணிகளில் நாளை மத்திய அரசு கையெழுத்து! தமிழர் முதுகில் குத்துவதில் மும்முரம்!!
தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோகார்பன் திட்டப் பணிகளில் மத்திய அரசு நாளை கையெழுத்திட உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக தனியார் நிறுவனத்துடன் மத்திய அரசு நாளை கையெழுத்திட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. சித்தேஸ்வராவின் குடும்ப நிறுவனமான ஜெம் லாபரெட்டரீஸுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிராக நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை ஆகிய இடங்களில் ஊர் மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.

மக்கள் விரும்பாதவரை...
இப்போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். மக்கள் விரும்பாத வரையில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என உறுதிமொழி அளித்தது பாஜக. மத்திய அமைச்சரிடம் நெடுவாசல் போராட்ட குழு நேரிலேயே சென்றும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாளை கையெழுத்து
தற்போது நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக தனியார் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாளை கையெழுத்திடுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நெடுவாசலில் பதற்றம்
பொய்யான வாக்குறுதிகள் தந்து போராட்டங்களை கைவிட செய்துவிட்டது மத்திய அரசு. ஆகையால் மீண்டும் போராட்ட களத்தில் இறங்கித்தான் மத்திய அரசுக்கு பதிலடி கொடுத்தாக வேண்டும் என்பது நெடுவாசல் மக்களின் கருத்து.

பதற்றம்
மத்திய அரசின் இந்த பச்சை துரோகத்துக்கு எதிராக போராட்டங்கள் மீண்டும் வெடிக்கும் நிலையே உருவாகி உள்ளது. இதனால் நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை ஆகிய இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications