பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!
கோவை: ஏற்கனவே நெஸ்லேவின் மேகி நூடுல்ஸ் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் தற்போது நெஸ்லேவின் பால் பவுடரும் புதுப் பிரச்சினையில் சிக்கியுள்ளது. குழந்தைகளுக்கான இந்த பால் பவுடரில் உயிருடன் புழுக்கள் கூட்டம் கூட்டமாக நெளிந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில்தான் இந்த குமட்டல் சம்பவம் நடந்துள்ளது.
மேகி நூடுல்ஸ் உடல் ஆரோக்கியத்தைக் காலி செய்யும் வகையில் உள்ளதாக உ.பி., பீகார் என பல மாநிலங்களில் பிரச்சினையாகி வருகிறது. இந்த விளம்பர படத்தில் நடித்த நடிகர், நடிகையர் மீது வழக்குகளும் பாய்ந்து வருகின்றன.

இந்த நிலையில் நெஸ்லேவின் பால் பவுடரால் புது சர்ச்சை வெளியாகியுள்ளது. கோவை புளியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ஆனந்த். டாக்சி டிரைவரான இவர் தனது குழந்தைக்கு வழக்கமாக வாங்கும் நெஸ்லே பால் பவுடரை வாங்கியுள்ளார். 380 கிராம் நெஸ்லே நான் புரோ 3 டப்பாவை அவர் வாங்கினார்.
இவருக்கு 18 மாதத்தில் ஒரு குழந்தையும், இன்னும் ஒரு இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர். 18 மாதக் குழந்தைக்கு இவர் பேபி பார்முலாவைக் கொடுத்து வருகிறார். இரட்டைக் குழந்தைகளுக்காக இந்த நெஸ்லே பால் பவுடரை அவர் வாங்கி வந்தார்.
வீட்டுக்கு வந்து டப்பாவைத் திறந்து பால் பவுடரை எடுக்க முயன்றபோது உள்ளே புழுக்கள் உயிருடன் நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பிரேம் ஆனந்த்.
மேலும் அவரது குழந்தைக்கு 2 நாட்கள் கழித்து தோலில் அலர்ஜியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விவகாரம் குறித்து நெஸ்லேவின் வாடிக்கையாளர் பிரிவில் புகார் கொடுத்தார் பிரேம் ஆனந்த். இதையடுத்து உள்ளூர் ஏரியா மேனேஜர் கிருஷ்ணபெருமாளுக்கு இதுகுறித்து விசாரிக்குமாறு நெஸ்லேவிடமிருந்து நோட்டீஸ் போனது. அவர் வேறு பால் பவுடர் டப்பாவைத் தருவதாக பிரேம் ஆனந்த்திடம் கூறினார். ஆனால் அதை ஏற்க பிரேம் ஆனந்த் மறுத்து விட்டார்.
இதையடுத்து நிறுவனத்தின் ஆய்வகத்தில் அந்த பால் பவுடரை சோதனை செய்ய நெஸ்லே பிரதிநிதி கூறியுள்ளார். ஆனால் அதையும் பிரேம் ஆனந்த் ஏற்கவில்லை. இது குழந்தைகளின் உயிர் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே பாரபட்சமற்ற நடுநிலையான விசாரணை தேவை என்று பிரேம் ஆனந்த் கூறி விட்டார்.
இந்த நிலையில் இந்த பால் பவுடரை கோவையில் உள்ள உணவு ஆய்வுகத்தில் ஆய்வு செய்து பார்த்தபோது அதில் 28 உயிருள்ள புழுக்கள் இருந்ததும், 22 சிறிய வகை புழுக்கள் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நுிர்வாகத் துறையை அணுகி இந்த பால் பவுடரின் சாம்பிளை அவர்களிடம் கொடுத்து புகார் செய்தார் பிரேம் ஆனந்த். இந்தப் பவுடர் மாதிரியை ஆய்வு செய்த அங்குள்ள நிபுணர்கள் இந்த பால் பவுடர் பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல என்று அறிக்கை கொடுத்துள்ளனர்.
இருப்பினும் இந்தப் பவுடருக்கு மட்டும்தான் இந்த அறிக்கை பொருந்தும், ஒட்டுமொத்தமாக நெஸ்லே தயாரிப்புகளுக்கு இது பொருந்தாது என்றும் இவர்கள் கூறியுள்ளனர்.
இன்னும் என்னவெல்லாம் கிளம்பப் போகிறதோ!
-
இந்தியா முழுக்க பேசுபொருளான கோவை பஸ்.. கர்நாடகாவில் உண்மையில் என்ன நடந்தது.. போலீசார் வார்னிங் -
கோவையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் எடுத்த முடிவு.. மாவட்ட கலெக்டருக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications