காலக் கொடுமை… ஏடிஎம்மில் பணம் எடுக்க வேலைக்கு ஆள் தேவையாம்… திருச்சியில் விளம்பரப் பலகை
ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்துக் கொடுக்க வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் திருச்சியில் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுப்பதற்கு சம்பளத்திற்கு ஆள் தேவை என்ற விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
500 மற்றும் 1000 ஆயிரம் நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தப் பிறகு இந்தியாவில் நடந்து வரும் துயரங்கள் சொல்லி மாளாதவை. பண மதிப்பு நீக்கம் கடந்த மாதம் 8ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஒரு மாதம் கடந்து போய் கொண்டிருக்கிறது. இன்னமும், வங்கியின் வாசலிலும், ஏடிஎம் மையத்தின் வாசலிலும் மக்கள் கூட்டம் அலை மோதியே படியே உள்ளது.

ஏடிஎம்மில் நீண்ட நேரம் வரிசையில் நின்று பணம் கிடைத்து விடும் என்றால் கூட பரவாயில்லை. பணம் எடுக்க அருகில் சென்ற நிலையில், ஏடிஎம் இயந்திரம் பணம் இல்லை என்று கைவிரித்துவிட பணத்தை எடுக்க முடியாத பொதுமக்கள், அடுத்த ஏடிஎம் மையம் நோக்கி ஓடுகின்றனர். ஒவ்வொரு நாளும் தங்களின் சொந்தப் பணத்தை எடுக்கவே பல மணி நேரம் வரிசையில் நிற்கின்றனர். பலர் தெருத் தெருவாக அலைந்து திரிந்து ஏடிஎம்மில் பணம் எடுத்துச் செல்கின்றனர்.
இதனால் நேரம் விரயம் அதிகம் ஏற்படுகிறது. வேலைக்குச் செல்வோரால் குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்ல முடியவில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கும் வீட்டு வேலை கெட்டுவிடுகிறது. 2000 ரூபாய் பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுக்க ஒரு நாள் வீணாகிவிடுகிறது. இதனால் மக்கள் கடுப்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடை ஒன்றில் ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுப்பதற்கு சம்பளத்திற்கு ஆள் தேவை என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்ப்பதற்கு காமிடியாக தோன்றினாலும், பாஜக ஆளும் இந்தியாவில் இதுதான் உண்மை நிலைமை என்கிறார்கள் பொதுமக்கள்.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு!












Click it and Unblock the Notifications