சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை... கட்டுமான பணிகளை தொடங்கியது கேரளா
கோவை: தமிழகத்தில் எதிர்ப்பு நிலவும் நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைக் கட்டுவதற்கு கேரளா முதல்கட்ட பணியை தொடங்கி உள்ளது. அணைக்கட்ட திட்டமிடப்பட்டுள்ள பகுதியில் கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகிறது.
பவானியின் துணை ஆறான சிறுவாணி ஆறு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகிறது. அட்டப்பாடி பள்ளத்தாக்கு வழியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தின் மேற்கு பகுதியில் பவானி ஆற்றுடன் சிறுவாணி ஆறு இணைகிறது.

இந்த ஆற்றின் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த ஆற்றின் மூலம் வரும் நீர் 60 சதவீதம் குடிநீருக்காகவும், 40 சதவீதம் பாசன வசதிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளா நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது. அண்மையில் மத்திய அரசு இப்புதிய அணைக்கான சுற்றுச் சூழல் ஆய்வை நடத்த கேரளாவுக்கு அனுமதி அளித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவுக்கு கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதமும் அனுப்பியிருந்தார்
இந்நிலையில், தடுப்பணை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள சித்தூர் மற்றும் சிறுவாணி ஆற்றங்கரையில் கட்டுமானப் பணிக்கான பொருட்களை கேரள அரசு குவித்து வருகிறது. அணை கட்ட ஆய்வு செய்வதற்கு மட்டும் மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், உரிய அனுமதி பெறாமல் கேரள அரசு கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளது.
கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே மதிமுக சார்பில் கேரளாவுக்கு எதிராக கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. வரும் 3-ந் தேதியன்று கோவையில் கேரளாவை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications