கையாலாகாத அரசு தான் தமிழகத்தில் இருக்கிறது.. ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு!
கையாலாகாத அரசு தான் தமிழகத்தில் இருக்கிறது என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம்: கையாலாகாத அரசு தான் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஓபிஎஸ் பேசுகையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசாணை பெற்று தந்த ஒரே தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான்.
தனக்கு பின் இவர்தான் பொதுச் செயலாளர் என்று ஜெயலலிதா யாரையும் அவர் குறிப்பிடவில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் முதலீடுகள் வேறு மாநிலத்திற்கு சென்றிருக்காது. காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்சனைகளில் திமுக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மீண்டும் ஆட்சிக்கு வர திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை.
சசிகலா, தினகரன் குடும்பத்தை கட்சியை விட்டு நீக்கும் வரை தர்மயுத்தம் தொடரும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசுக்கு பாடமாக அமையும். கையாலாகாத அரசு தான் தமிழகத்தில் இருக்கிறது என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.