எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவதை எதிர்த்து வழக்கு இல்லை.. செம்மலை திடீர் முடிவு
வழக்கறிஞர் ஜோதி என்பவர் மூலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர அதிமுக எம்எல்ஏ செம்மலை மேற்கொண்டிருந்த திட்டம் கைவிடப்பட்டது.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதை எதிர்த்து வழக்கறிஞர் மூலம் வழக்கு தொடர வைத்திருந்த திட்டத்தை மேட்டூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான செம்மலை கைவிட்டார்.
ஜெயலலிதாவுக்கு நீண்ட காலம் தனிப்பட்ட வழக்கறிஞராக பணியாற்றி அனுபவம் கொண்ட வழக்கறிஞர் ஜோதி என்பவரை பயன்படுத்தி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்பதை எதிர்த்து, சென்னை ஹைகோர்ட்டில் இன்று பொது நல வழக்கு தொடர திட்டமிட்டிருந்தார் செம்மலை.

நீதிபதிகள் ரமேஷ் குலுவாடி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில், பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கு தொடரும் முடிவை செம்மலை திடீரென கைவிட்டார். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்படவிருந்த சட்டச் சிக்கல் தீர்ந்தது. ஓ.பி.எஸ் தரப்பும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் நட்பு பாராட்டுவதே இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
60 sec- எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதை எதிர்த்து வழக்கறிஞர் மூலம் வழக்கு தொடர வைத்திருந்த திட்டத்தை மேட்டூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான செம்மலை கைவிட்டார்.
-
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால் குமுறல் -
சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை? அவசர முறையீட்டில் ஐகோர்ட் தலைமை நீதிபதி கேட்ட கேள்வி! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications