மருத்துவ மேற்படிப்பில் 50% நிலைக்க அவசரச் சட்டமே தீர்வு.. அதுவரை போராட்டம் தொடரும்.. மாணவர்கள் உறுதி
மருத்துவ மேற்படிப்பில் 50 சதவித இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வர அவசரச் சட்டமே தீர்வு என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
50 சதவீத இடஒதுக்கீடு கோரி 15 நாட்களாக மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அவர்களை சோர்வடையச் செய்துள்ளது. தீர்ப்பு குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர் ரவீந்திரநாத் கூறியதாவது:
இந்தப் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்ப்புக் கிடைக்காது. எனவே, தொடக்கத்தில் இருந்தே அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் நாங்கள் கோரி வருகிறோம். பின்னர், அந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் வைத்து நிரந்தர சட்டமாக மாற்ற வேண்டும். அப்போதுதான் அது நிலையாக இருக்கும்.

அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்று உச்ச நீதிமன்றம் சொல்லிய நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் அதனை பின்பற்றுகிறது. இந்நிலையில், கீழ் நீதிமன்றத்தில் மேலும் மேலும் முறையீடு செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே, தமிழக அரசு சுதாரித்துக் கொண்டு மத்திய அரசை வற்புறுத்தி அவசரச் சட்டத்தைக் கொண்டு நடவடிக்கை எடுக்க வர வேண்டும். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இதனைச் செய்ய வேண்டும்.
அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும். தமிழகம் முழுவதும் இதுதொடர்பாக போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், அனைத்து மருத்துவர்கள் சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்ட வேண்டும் என்று ரவீந்திரநாத் கூறினார்.
இதனால் 15 நாட்களாக பல கட்டங்களாக போராடி வந்த மருத்துவ மாணவர்களின் போராட்டம் இன்றோடு முடிந்துவிடும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், நீதிபதிகளின் மாறுபட்ட கருத்துக்களால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications