கிரண்பேடிக்கு எதிராக.. ஆளுநர் அதிகாரத்தை குறைத்து புதுவை சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்
புதுவையில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க கோரி புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுவை: ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க கோரி புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாராயணசாமியை முதல்வராகக் கொண்டு காங்கிரஸ் கட்சி புதுவையில் ஆட்சி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து தலையிட்டு வருகிறார்.
யூனியன் பிரதேசத்தில் யாருக்கு அதிகாரம் அதிகம் என்பது குறித்து தொடர்ந்து சர்ச்சை எழுந்து வரும் நிலையில், மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் புதுவையில் செயல்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

நாராயணசாமி புகார்
இந்நிலையில், புதுச்சேரியின் அரசு நிர்வாகத்தில் ஆளுநர் கிரண் பேடி தேவையற்ற முறைகளில் தலையீடு செய்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புதுவை முதல்வர் நாராயணசாமி புகார் தெரிவித்தார்.

கிரண்பேடி புகார்
அதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் டெல்லி சென்ற கிரண் பேடி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, முதல்வர் நாராயணசாமி பற்றியும் புதுவையில் நடக்கும் பிரச்சனை குறித்தும் கிரண் பேடி விரிவாக மோடியிடம் கூறியுள்ளார்.

சட்டசபையில் தீர்மானம்
இந்நிலையில், இன்று புதுவை சட்டசபையில், அதிமுக எம்எல்ஏ அன்பழகன், ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்தத் தீர்மானம் அரசின் தீர்மானமாகக் கொண்டு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆளுநருக்கு அதிகாரம் இல்லை
தீர்மானத்தின் மீது சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியை பொறுத்தவரை சட்டசபைக்குதான் அதிக அதிகாரம் உள்ளது என்று கூறினார். மேலும், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் உரிமையை பறிக்கும் விதத்தில் ஆளுநர் செயல்படுவதை ஏற்க முடியாது என்று நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications