மதம் மாறியதால் தலித்துகள் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை: திருமாவளவன்
சென்னை: ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவதால் தலித்துகள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தந்தை அம்பேத்கர், பெளத்த மதத்திற்கு மாறிய அறுபதாம் ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு திருமாவளவன் அளித்த ஒரு பேட்டியொன்றில், தலித்துகள் மதம் மாறுவதால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வேறு மதத்திற்கு செல்வதால் தலித்துகள் என்ற அடையாளத்தை இழந்து சலுகைகளை இழந்ததுதான் மிச்சம் என்று கூறியுள்ளார்.
சாதி மறுப்பு என்பது அம்பேத்கரின் முக்கியமான லட்சியம். தலித்துகளுக்கு இழைக்கப்படும் அநீதியில் இருந்து தப்பிக்க, சாதி மறுப்பு மிக முக்கியமானதுதான் என்றபோதிலும் இது மட்டுமே போதுமானதாக இல்லை என்றும், மதம் மாறுவது என்பது தனிநபரின் சுதந்திரத்திற்கு உள்பட்டது என்றும் திருமா கூறியுள்ளார்.

திமுக, அதிமுக
தலித்துகளின் பிரச்னைகளில் அதிமுக எந்தக் கருத்தையும் சொல்வது கிடையாது. மிகவும் நெருக்கடி தரப்பட்டால் மட்டுமே திமுக, தலித்துகளுக்கு ஆதரவாகப் பேசுகிறது என்று கூறும் திருமாவளவன், ஜனநாயகத்தில் எண்ணிக்கைதான் முக்கியம். இதை இழப்பதால் தலித்துகளால் அரசியலில் சோபிக்க முடியாது என்றும் தனது அச்சத்தை வெளிப்படுத்தினார்.

மறுபரிசீலனை
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கூறுகையில், அம்பேத்கர் மதம் மாறுவதற்காகச் சொல்லப்பட்ட காரணங்கள், இந்த அறுபது ஆண்டுகளில் எந்த அளவுக்கு ஈடேறியிருக்கிறது என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.

கிறிஸ்தவத்தில் ஜாதி
இன்னொரு மதத்தைத் தழுவுவதன் மூலம் அவர்களுக்கு பொருளாதார பலமோ, மனரீதியான பலமோ கிடைக்குமா? என்றால், அதையும் உறுதியாகக் கூற முடியவில்லை. கிறிஸ்தவ மதத்திற்கு மாறிச் சென்ற தலித்துகள் அங்கேயும் தீண்டாதவர்களாகத்தான் நடத்தப்படுகிறார்கள் என்பதை தலித் கிறிஸ்துவர்கள் படும் துயரங்களே எடுத்துக்காட்டுகின்றன.

எண்ணிக்கை தேவை
நமது நாடாளுமன்ற ஜனநாயக முறையில், தலித்துகளுக்கு இருக்கும் ஒரே பலம் எண்ணிக்கை பலம்தான். அந்த பலத்தைக் கொண்டுதான் அவர்கள் ஏதேனும் குறைந்த அளவாவது அதிகாரத்தை கைப்பற்ற முடியும். அந்த எண்ணிக்கை பலத்தை குறைப்பதாக, மதமாற்றம் இருந்துவிடக் கூடாது. தலித் கிறிஸ்துவர்களை தலித்துகளாக அங்கீகரித்து அவர்களுக்கு இடஒதுக்கீடு முதலான சலுகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications