என் ஆதரவு யாருக்குன்னு உங்ககிட்ட சொல்ல முடியாது... வைரலாகும் அமைச்சர் வளர்மதி வாக்குவாதம் ஆடியோ
தமது ஆதரவு யாருக்கு என சொல்ல முடியாது என தொகுதி வாக்காளருடன் அமைச்சர் வளர்மதி தொலைபேசியில் வாக்குவாதம் செய்யும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருச்சி: தமிழக அமைச்சரான ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. வளர்மதி தாம் யாரை ஆதரிப்பேன் என பகிரங்கமாக கூற முடியாது என வாக்காளர் ஒருவருடன் தொலைபேசியில் வாக்குவாதம் செய்யும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதிமுக இரண்டாக உடைந்துள்ளது. முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் முதல்வர் பதவிக்காக பேராசைப்படும் அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா தலைமையில் ஒரு அணியுமாக பிளவுபட்டு நிற்கிறது.

முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு பொதுமக்களும் அதிமுக தொண்டர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் தொலைபேசி எண்கள் சமூக வலைதளங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டு தொகுதி மக்களே! உங்கள் எம்.எல்.ஏ.வை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்க வலியுறுத்துங்கள் என்ற பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுகிறது.
இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் அதிர்ந்து போயுள்ளனர். அமைச்சரும் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான வளர்மதிக்கு பெண் வாக்காளர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நீங்கள் ஆதரியுங்கள் என்ற கோரிக்கை விடுத்தார். இதற்கு, நீங்க எனக்கா ஓட்டுப் போட்டீங்க.. என்னுடைய இரட்டை இலை சின்னத்துக்குதானே ஓட்டுப் போட்டீங்க? என்றும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை விமர்சித்தும் பேசியுள்ளார்.
இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் இந்த ஆடியோ அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
-
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications