தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை! உடன்பாடு ஏற்படுமா?
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை வார்த்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தையில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 13ம் ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும். இது காலதாமதமாகி வந்ததால் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர கோரி கடந்த மார்ச் 7ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதனால் தொ.மு.ச. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் இணைந்து கடந்த மாதம் மாநிலம் தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. இது ஆளும் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி ஆகியோர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனடிப்படையில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் 24ம் தேதி அரசுப் போக்குவரத்து துறை செயலாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதற்கிடையில் மதுரை ஹைகோர்ட்டு, தாமாக முன்வந்து, தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணப்பலன்களை ஏன் இதுவரை வழங்கவில்லை என கேள்வி எழுப்பியதுடன், தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வழக்கு வரும் 9ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை இன்று சென்னை குரோம்பேட்டையில் தொடங்கி நடந்து வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை செயலாளர், 47 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பின்னர் தான், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்க இயலும். என்று தெரிகிறது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications