வர்தா.. சென்னை விமான நிலையம் இரவு 8 மணிவரை மூடல்.. தண்ணீர் வெளியேற்றும் பணி துரிதம்
சென்னை விமான நிலைய ஓடுதளம் மாலை 6 மணிவரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 25க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டன.
சென்னை: வர்தா புயல் காரணமாக சென்னையில் விமானங்களால் தரையிறங்க முடியவில்லை. எனவே காலை 11 மணி நிலவரப்படி, 25 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டன. 9 விமானங்கள் தாமதமாகின. 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 7 சர்வதேச விமானங்களும் கூட தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை இழுத்து மூடப்பட்டது. தண்ணீர் தேங்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் மழையும், காற்றும் விடாத காரணத்தால், மதியம் 3 மணிவரை ஓடுதளம் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. அப்போதும் நிலைமை மோசமாக இருந்ததால் மாலை 6 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் வெள்ளம் வடியவில்லை என்பதால் இரவு 8 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேபோல சென்னையில் புற நகர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
மேலும் புயல் ஆந்திராவின் தெற்கு பகுதி வழியாக செல்லும் என்பதால், திருப்பதி விமான நிலையமும் மூடப்பட்டுள்ளதாம். இவ்விரு விமான நிலையங்களுக்கு வர வேண்டிய விமானங்கள், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications