Shoba Chandrasekhar: அன்னையர் தினத்தில் பதவியேற்கும் விஜய்! தாய் ஷோபா சந்திரசேகர் நெகிழ்ச்சி!
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்கிறார். இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படும் நிலையில், விஜய் பதவியேற்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று அவரது தாய் ஷோபா சந்திரசேகர் கூறியிருக்கிறார்.
1967க்கு பிறகு தமிழ்நாட்டில் இன்று முதல் முறையாக திராவிட கட்சிகள் அல்லாத ஆட்சி அமைகிறது. திரைத்துறையில் வெற்றி நாயகனாக வலம் வந்த விஜய் தற்போது அரசியல் களத்திலும் வெற்றி நாயகனாக மாறியிருக்கிறார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இருப்பினும் பெரும்பான்மை கிடைக்காததால், விஜய் முதலமைச்சராவதில் பெரிய சிக்கல் நீடித்தது. எனவே திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த இடதுசாரிகள் மற்றும் விசிகவிடம் ஆதரவு கேட்டிருந்தது. இதனையடுத்து இக்கட்சிகள் ஆதரவளித்த நிலையில், ஆதரவு கடிதத்தை நேற்றிரவு ஆளுநரிடம் விஜய் சமர்பித்திருந்தார்.
இதனையடுத்து இன்று விஜய்க்கு ஆளுநர் இன்று பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அவருடன் ஒரு பெண் அமைச்சர் உட்பட 8 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications