சென்னை: கொரோனா வைரஸ் கேஸ்கள் இதுவரை இல்லாத அளவுக்கு, வேகத்தில் அதிகரித்து வருவதால், இந்தியாவில் இருந்து இயக்கப்படும் விமானங்களை ஹாங்காங் தடை செய்துள்ளது.
நிறுத்துங்க… எல்லா ஃபிளைட்டையும் நிறுத்துங்க... இந்தியாவுடனான விமானங்கள்… ஹாங்காங் தடா!
இந்த தடை ஏப்ரல் 20 முதல் மே 2 வரை அமலில் இருக்கும். இரண்டு விஸ்டாரா விமானங்களில் வந்த 50 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையை ஹாங்காங் எடுத்துள்ளது.
இதேபோல பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸிலிருந்தும், ஹாங்காங் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.
Advertisement
Advertisement
இதற்கிடையில், இந்தியாவில் மோசமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான கால அவகாசம் கொண்ட விமானங்களில் விமான நிறுவனங்கள் உணவு பரிமாறாது என்று விமான அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களில் விமானத்தில் சாப்பிடுவதில் எந்த தடையும் இல்லை.