கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்... திடீரென மருத்துவமனையில் அனுமதி.. காரணம் இதுதான்
சென்னை: இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இரவு 10 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன். இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்கள் எடுத்த ஒரே வீரர் என்ற மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரர்.

இதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளிலும் அவர் சென்னை, பெங்களூரு அணிகள் சார்பில் பங்கேற்றுள்ளார். தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அவர் உள்ளார்.
இந்நிலையில், நேற்று முத்தையா முரளிதரன் தனது 48ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், தற்போது அவர் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு 10 மணியளவில் இதய பிரச்சனை காரணமாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்குச் சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளதாகவும் விரைவில் அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இணைவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications