கொல்கத்தாவில் திடீர் நிலநடுக்கம்.. வீடு - அலுவலகத்தை விட்டு அலறியடித்து ஓடிய மக்கள்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இன்று மதியம் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த சம்பவம் நடந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகராக கொல்கத்தா உள்ளது. எப்போதும் இந்த நகரம் பரபரப்பாக இயங்கும். இந்நிலையில் தான் இன்று மதியம் திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

earthquake-jolts-in-kolkata-after-bangladesh-people-runout-from-offices-and-home

கொல்கத்தாவில் உள்ள கட்டடங்கள் திடீரென குலுங்கின. மேஜைகளில் இருந்த பொருட்கள் உருண்டு கீழே விழுந்தன. இதனால் ஷாக்கான மக்கள் தங்களின் வீடு மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியே ஓடிவந்தனர். காலி இடத்தில் மொத்தமாக அவர்கள் தஞ்சமடைந்தனர். திடீரென குலுங்கிய பூமியால் கொல்கத்தா மக்கள் பீதியில் உள்ளனர்.

இருப்பினும் நிலநடுக்கத்தின் அளவு என்பது உடனடியாக தெரியவில்லை. நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு பற்றி ஆராயப்பட்டு வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது அதிகமான அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ரிக்டர் அளவில் 5 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, வங்கதேசத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியா - வங்கதேச எல்லையாக மேற்கு வங்க மாநிலம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வு கொல்கத்தாவிலும் உணரப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+