அமெரிக்காவில் இருந்து வந்த மெகா புயல்.. அடுத்த நொடி எகிறி அடித்த இந்திய பங்குச்சந்தைகள்.!
மும்பை: இந்திய முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரு சிறப்பான நாள் என்றே சொல்லலாம். இன்று காலை பங்குச்சந்தைகள் சற்று இறக்கத்தோடு ஆரம்பித்தாலும் கூட ஒரே மணி நேரத்தில் அது மொத்தமாக மாறியது. அதன் பிறகு பங்குச்சந்தை தாறுமாறாக அதிகரிக்க ஆரம்பித்தது. அமெரிக்காவில் அடித்த புயலே இந்தியப் பங்குச்சந்தையை உயர வைத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று வியாழக்கிழமை இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் ஆரம்பித்தன. ஆரம்பத்தில் சற்று சரிவுடனேயே இந்தியப் பங்குச்சந்தை தொடங்கியது. முதல் ஒரு மணி நேரம் வரை கூட இந்தியப் பங்குச்சந்தைகள் இதே நிலையில் தான் இருந்தது. ஆனால், அதன் பிறகே சந்தை மெல்ல மாறியது.

பங்குச்சந்தை
வர்த்தகம் தொடங்கி ஒரு மணி நேரத்தில் பங்குச்சந்தையில் எதிர்பாராத திருப்பம் நடந்தது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சரிவில் இருந்து மீண்டு உயர ஆரம்பித்தது. அங்கு எகிற ஆரம்பித்த பங்குச்சந்தை பிற்பகல் வரை அப்படியே இருந்தது.. ஒரு கட்டத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேலும், தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 120 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வர்த்தகமாகின. அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கு மேலாக நிலவி வந்த ஷட் டவுன் முடிவுக்கு வந்ததே இதற்குப் பிரதானக் காரணமாகும்.
உயர்வு
சர்வதேச சந்தையின் எதிரொலியாக முதலில் சரிவுடன் ஆரம்பித்த சந்தை, அமெரிக்காவில் இருந்து வந்த புயலால் எகிற ஆரம்பித்தது. இப்போது பிற்பகல் 1.45 மணியளவில் 84,889 சென்செக்ஸ் புள்ளிகளிலும். நிஃப்டி 25,999 புள்ளிகளிலும் வத்தகமாகி வருகிறது. கிரேடெக்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ், ப்ரேஸிஸின் ஒயிர்ஸ் இந்தியா, டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பங்குகள் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
முன்பே குறிப்பிட்டது போல அமெரிக்காவில் ஷட் டவுன் முடிவுக்கு வந்ததே இதற்குப் பிரதானக் காரணமாகும். எப்போதுமே அமெரிக்காவில் ஏற்படும் எந்தவொரு முக்கிய மாற்றமும் ஆசிய மற்றும் இந்தியச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படியே ஷட் டவுன் முடிவுக்கு வந்ததும் இங்குச் சந்தை உயர ஆரம்பித்தது.
அமெரிக்காவில் அடித்த புயல்
அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட ஷட் டவுனாக இது கருதப்படுகிறது. அக்டோபர் 1ம் தேதி ஆரம்பித்த இந்த ஷட் டவுன் 43 நாட்கள் நீடித்தது. நீண்ட இழுபறிக்கு பிறகே செலவின மசோதா அமெரிக்காவின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்தே அந்த மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இதன் மூலம் அமெரிக்க ஷட் டவுன் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.
ஆசியா முழுக்க
அதிபர் டிரம்ப் அந்த மசோதாவில் கையெழுத்திட்ட பிறகு, பெரும்பாலான ஆசியச் சந்தைகள் உயர்ந்தன. ஜப்பானின் நிக்கி குறியீடு 153 புள்ளிகள் உயர்ந்து 51,217 ஆகவும், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 30 புள்ளிகள் உயர்ந்து 4180 ஆகவும் வர்த்தகமாகின. அமெரிக்க அரசு ஷட் டவுன் முடிவுக்கு வந்ததால், ஆசியச் சந்தைகளில் ஏற்பட்ட இந்த ஏற்றத்தின் தாக்கம் இந்தியச் சந்தையிலும் தெளிவாகத் தெரிந்தது. இதன் காரணமாகவே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வேகமாக உயர்ந்து வர்த்தகமானது.












Click it and Unblock the Notifications