ஆசிரியை அடித்ததாக புகார்.. சிவகங்கை மாணவி தற்கொலை.. பெற்றோர் போராட்டம் நடத்த முடிவு!
சிவகங்கை: இளையான்குடியில் ஆசிரியை அடித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என பெற்றோர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
இளையான்குடி அருகே திருவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அழகர்சாமி- அழகு தம்பதியினர், இவர்களது மகள் கவிதா (17). இளையான்குடி மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2 ஆம் தேதி வீட்டில் கவிதா சோகமாக இருந்ததை பார்த்த அவரது தாயார் அழகு, ஏன் சோகமாக இருக்கிறாய் என கேட்டபோது வீட்டுப்பாடம் செய்யாததால் தனது வகுப்பறை ஆசிரியர் சம்சந்த் நிஷா தன்னை அடித்ததாகவும் அதனால் சோர்வாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எலி மருந்து
அதன் பின்னர் தொடர்ந்து மனக் கவலையில் இருந்த கவிதா கடந்த 4 ஆம் தேதி எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடும்பத்தினர் இவரை சிகிச்சைக்காக பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அதன் பின்னர் மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மேல் சிகிச்சை
அதைத் தொடர்ந்து கவிதா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கவிதாவின் தாயார் அழகு இளையான்குடி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு நடவடிக்கை
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து 7 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கவிதாவின் பெற்றோர் தரப்பினர் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்தும் மகள் கவிதா சாவிற்கு காரணமான ஆசிரியை சம்சந்த் நிஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப் போவதாக கவிதாவின் பெற்றோர் தரப்பினர் தெரிவித்தனர்.

ஆசிரியை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் ஆசிரியை அடித்ததால் 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் புகார் கொடுத்து இன்னமும் சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் விசாரணையை கூட பள்ளி நிர்வாகம் முன் வைக்காதது ஏனோ என தெரியவில்லை.
-
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications