கரோல் ஓஜ்திலா.. ஒரு இறை தூதனின் பயணம்
மறைந்த போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பாலின் இயற்பெயர் கரோல் ஓஜ்திலா. இவர் 1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்திலுள்ள வாடோவைஸ்என்ற நகரில் பிறந்தார். இவரது தந்தை கரோல் போலந்து நாட்டு ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றினார். தாயார் எமிலியா ஒரு பள்ளி ஆசிரியை. இவர்களது 2வது மகன் தான் கரோல் ஓஜ்திலா. பள்ளிப் படிப்பை முடித்த இவர், 1939ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார்.அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த போதே ஜகிலோனியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இலக்கியம் மற்றும் தத்துவ இயல் பயின்றார். இரண்டாம் உலகப் போர் மூண்ட போது சிறையில் அடைக்கப்படாமல் இருப்பதற்காக இவர், கல் உடைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
|