மெட்டுக்கேற்ப பாடல் எழுதுவது ரொம்ப கஷ்டம்: வைரமுத்து

பிரபல திரை திறனாய்வாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் கவிஞர்களின் திரை இசைப் பாடல்கள் என்ற நூலை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மெட்டுக்கேற்ப பாடல் எழுதுவது என்பது கடினமானது. மெட்டுக்கேற்ப பாடல் எழுதுவதற்கு அளவுகோல் உள்ளது. உங்களுக்காக காத்திருக்கும் மெட்டுக்குள் பொருந்தும் வகையில் நீங்கள் வரிகளைப் போட வேண்டும். அதை எழுதிப் பாருங்கள், அப்போதுதான் அதன் சிரமம் உங்களுக்குப் புரியும்.
கிழக்குச் சீமையிலே படத்தில் நான் எழுதிய கத்தாழங்காட்டு வழி பாடல் அப்படி சிரமப்பட்டு பிரசவித்ததுதான். இப்படி மெட்டுக்கு பாட்டு எழுதும்போது உங்களது உணர்வுகளை முழுமையாக உங்களால் வெளிப்படுத்த முடியாது.
ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தும்போதுதான் அந்தப் பாடல் முழுமை அடையும். அதன் அர்த்தமும் விளங்கும். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது.
கத்தாழங்காட்டு வழி பாடலுக்காக நான் 3 நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அந்தப் பாடலுக்கான மெட்டு என்னிடம் வந்தபோது விஜயகுமாரும், நெப்போலியனும் மட்டுமே எனது மனதில் தோன்றினார்கள். அவர்களது முரட்டு மீசைகள்தான் எனது மனதில் மின்னின. அவற்றையும் எனது பாடலில் பதிவு செய்தேன்.
ஆனால் இப்படி கஷ்டப்பட்டு பாடல்களைப் புனையும்போது, ரசிகர்களிடமிருந்து நமக்கு பாராட்டுக்களும், கைத்தட்டல்களும் கிடைக்கும்போது அந்த வலி பறந்து போய் விடும்.
கவிஞர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் அல்ல திரைப்படப் பாடலாசிரியர்கள். அவர்களை கவிஞர்களின் ஏழை சகோதரர்களாக யாரும் நினைத்து விடக் கூடாது என்றார் வைரமுத்து.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications