காந்தியவாதி நிர்மலா தேஷ்பான்டே மரணம்
Subscribe to Oneindia Tamil

ராஜ்யசபா உறுப்பினரான நிர்மலா தேஷ்பான்டே, பழம்பெரும் காந்தியவாதிகளில் ஒருவர் ஆவார்.
காந்தியடிகளின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வந்தவர் நிர்மலா தேஷ்பான்டே. இன்று காலை அவர் தனது இல்லத்தில் மரணமடைந்தார். இத்தகவலை அவரது உதவியாளரான ராஜ்ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே உடல் நலம் குன்றியிருந்த நிர்மலா, இன்று காலை தூங்கும்போதே மரணமடைந்தார்.
நிர்மலாவின் மரணத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பரிசீலிக்கப்பட்ட வேட்பாளர்களில் நிர்மலா தேஷ்பான்டேவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications