ஆக.14ல் தமிழர் சமய உலக முதல் மாநாடு
சென்னை: தமிழரின் ஆன்மிகம், ஒருமைப்பாடு உள்ளிட்ட சிந்தனைகளை உலகுக்கு உணர்த்தும் வகையில் தமிழர் சமய உலக முதல் மாநாடு சென்னை - மயிலை உயர் மறை மாவட்ட அருட்பணி மையத்தில் வரும் 14 முதல் 17ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து சென்னை மயிலை கத்தோலிக்கப் பேராயர் ஏ.எம்.சின்னப்பா கூறியதாவது:
சென்னை - மயிலை கத்தோலிக்கப் பேராயமும் உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்கமும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. மதங்கள் தனித்தனி தீவுகளாக இயங்கி வருகின்றன. உலக மதங்களை ஒன்றிணைக்கும் முயற்சியின் தொடக்கம்தான் இந்த மாநாடு. இதில் 9 தொடர் கட்டுரைகள் வழங்கப்பட உள்ளன. தமிழக பல்கலைக்கழகங்களிலுள்ள 76 அறிஞர்கள் இதில் பங்கு பெறுகின்றனர்.
உலக மதங்களின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதால் தனி ஒரு மதத்தின் மீது மட்டும் பற்று கொள்வதும், பிற மதங்கள் மீது வெறுப்பு கொள்ளும் நிலை மாறி, அனைத்து மதங்களையும், மக்களையும் புரிந்து கொள்ள இந்த மாநாடு வழிவகுக்கும். இதில் எல்லா மதங்களையும் சார்ந்தவர்கள் பங்கு பெறலாம் என்றார்.












Click it and Unblock the Notifications