இந்தியாவின் வயதான மனிதர் மரணம்!

Subscribe to Oneindia Tamil

Habib Miyan
ஜெய்ப்பூர்: இந்தியாவிலேயே மிகவும் வயதான மனிதர் என்று லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஹபீப் மியான் இன்று காலை ஜெய்ப்பூரில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார்.

ஹபீப் மியானுக்கு வயது 139 ஆகும். இந்தியாவிலேயே மிகவும் வயதான மனிதர் என்று லிம்கா சாதனைப் புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இன்று அதிகாலை இவருக்கு வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முடியாத அளவுக்கு உடல் நிலை இருந்ததால் அவர் வீட்டிலேயே மரணமடைந்தார்.

மிகவும் எளிமையான மனிதர் ஹபீப் மியான். மற்றவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்துப் போய் விடும் இரக்க சுபாவம் கொண்டவர். ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தால் மனக் கவலையில் இருந்து வந்த அவர், தனது 139வது பிறந்த நாளை கொண்டாட மறுத்து விட்டார்.

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு குறித்து தனது குடும்பத்தாரிடம் அவர் கூறுகையில், இந்த சம்பவம் என்னை உடையச் செய்துவிட்டது. எத்தனை அப்பாவி உயிர்கள் பறிபோயுள்ளன. எனது வாழ்க்கையில் ஜெய்ப்பூரில் நான் பார்த்த முதல் கொடுமையான, கொடூரமான சம்பவம் இதுதான் என்று கண்ணீர் மல்கக் கூறினாராம் மியான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+