துபாய் அல்நூர் பள்ளிக்கு தமிழ் மகளிர் வட்டம் உதவி
துபாய் அல்நூர் சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு அபுதாபி தமிழ் மகளிர் வட்ட நிர்வாகிகள் புதன்கிழமை சென்று அக்குழந்தைகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கினர். மேலும் அவர்களுக்கு நிதி சேகரிக்கும் விதமாக பல்வேறு சிறப்புத் திட்டங்களையும் அறிவித்துள்ளனர்.
அபுதாபி தமிழ் மகளிர் வட்டம் (http://www.tamilladiescircle.com) பல்வேறு சமூக, கல்வி மற்றும் கலாச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் அபுதாபி தமிழ் மகளிர் வட்ட நிறுவன தலைவர் மீனா வெங்கடேஷ், லதா கலைசெல்வன், சித்ரா ராஜசேகர், நஜிரா இல்யாஸ், செண்பகவள்ளி, பானு சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அபுதாபி தமிழ் மகளிர் வட்ட நிர்வாகிகள் தங்களது பள்ளிக்கு வருகை புரிந்ததையடுத்து பள்ளிக்குழந்தைகள் குதூகலம் அடைந்தனர்.
மேலும் விபரங்கள் மற்றும் தொடர்புக்கு:
மீனா வெங்கடேஷ் 050- 4131478 /050-2460415
இணையத்தளம் : www.tamilladiescircle.com
மின்னஞ்சல் [email protected]












Click it and Unblock the Notifications