கரூரில் கம்பம் ஆற்றில் விடும் திருவிழா-லட்சகணக்காண பக்தர்கள் குவிந்தனர்!
Subscribe to Oneindia Tamil

இந்தக் கோயிலில் வைகாசி பெருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கம்பம் ஆற்றில் விடும் விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி காலை முதலே பக்தர்கள் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
கோயிலில் உள்ள கம்பத்திற்கு பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் தலைமையில் மலர்கள் தூவி, சிறப்பு பூஜைகள் செய்து எடுத்து வருவர். அப்படி எடுத்து வரும் கம்பம் கடை வீதி வழியாக அமராவதி ஆற்றில் கொண்டு விடுவர்.
கம்பம் ஆற்றில் விட்ட பின் சுமார் 2 மணி நேரம் வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த திருவிழாவைக் காண கரூர், திருச்சி, சேலம், கோவை, மதுரை, திண்டுக்கல் போன்ற வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரவுள்ளனர்.
இதையொட்டி கரூர் எஸ்.பி. தினகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications