ராஜபக்சேவுக்கு பி.ஆர். வேலை பார்த்த இந்தியா-கருத்தரங்கில் தாக்கு
சென்னை: இலங்கை இனப்போரின் இறுதிக் கட்டத்தில் ராஜபக்சேவின் பி.ஆர்.ஓ போலத்தான் இந்தியா நடந்து கொண்டது என்று பிரபல பத்திரிக்கையாளர் சத்யா சிவராமன் கூறினார்.
இலங்கையில் அடுத்தது என்ன என்ற தலைப்பில் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் அவர் பேசுகையில், ஜனநாயக ரீதியிலான தீர்வு காண முயற்சிக்காமல், இலங்கை அரசை, சர்வதேச சமுதாயத்திடமிருந்து பாதுகாக்கக்கத்தான் இந்தியா அதிக அக்கறை காட்டி வந்தது.
இலங்கை அரசு செய்து வந்த போர்க் குற்றங்கள், இனப்படுகொலைகளை சர்வதேச சமுதாயத்திடமிருந்து மறைக்கும் நடவடிக்கைகளில்தான் இந்தியா ஈடுபட்டிருந்தது.
இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளைப் போல இந்தியாவும் இலங்கை ராணுவத்திற்கு நேரடியாக உதவிகள் செய்து வந்தது. ஆனால் மற்றவர்கள் செய்த உதவிகள் நேரடியாக இருந்தன. ஆனால் இந்தியா படு ரகசியமாக செய்து வந்தது. இது நிச்சயம் வெளியில் தெரியவே தெரியாது, கடைசி வரை தெரியவும் தெரியாது.
இலங்கையில் தான் நடந்து கொண்ட விதத்தை மறைப்பதற்காக சீனாவு உள்ளே நுழைந்து விடுமே என்பதால் உதவிகள் செய்தோம் என்ற சொத்தை வாதத்தை வைக்கிறது இந்தியா.
தனி தமிழ் ஈழம் உருவாவதை உண்மையில் இந்தியா விரும்பவில்லை. தனி ஈழம் உருவானால், இந்தியாவில் தனி நாடு கோரிக்கைகள் பெருமளவில் தலை தூக்கி விடும் என்ற அச்சமே அதற்குக் காரணம்.
மத்தியிலும், தமிழகத்திலும் உள்ள ஆட்சிகள், இலங்கை இனப் பிரச்சினையை கால்பந்து விளையாட்டாக மாற்றி விட்டன. இதில் பந்தாக மாறி உதைபட்டு நிற்பவர்கள் அப்பாவி ஈழத் தமிழர்கள்தான் என்றார்.
-
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்!












Click it and Unblock the Notifications