ராஜபக்சேவுக்கு பி.ஆர். வேலை பார்த்த இந்தியா-கருத்தரங்கில் தாக்கு
சென்னை: இலங்கை இனப்போரின் இறுதிக் கட்டத்தில் ராஜபக்சேவின் பி.ஆர்.ஓ போலத்தான் இந்தியா நடந்து கொண்டது என்று பிரபல பத்திரிக்கையாளர் சத்யா சிவராமன் கூறினார்.
இலங்கையில் அடுத்தது என்ன என்ற தலைப்பில் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் அவர் பேசுகையில், ஜனநாயக ரீதியிலான தீர்வு காண முயற்சிக்காமல், இலங்கை அரசை, சர்வதேச சமுதாயத்திடமிருந்து பாதுகாக்கக்கத்தான் இந்தியா அதிக அக்கறை காட்டி வந்தது.
இலங்கை அரசு செய்து வந்த போர்க் குற்றங்கள், இனப்படுகொலைகளை சர்வதேச சமுதாயத்திடமிருந்து மறைக்கும் நடவடிக்கைகளில்தான் இந்தியா ஈடுபட்டிருந்தது.
இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளைப் போல இந்தியாவும் இலங்கை ராணுவத்திற்கு நேரடியாக உதவிகள் செய்து வந்தது. ஆனால் மற்றவர்கள் செய்த உதவிகள் நேரடியாக இருந்தன. ஆனால் இந்தியா படு ரகசியமாக செய்து வந்தது. இது நிச்சயம் வெளியில் தெரியவே தெரியாது, கடைசி வரை தெரியவும் தெரியாது.
இலங்கையில் தான் நடந்து கொண்ட விதத்தை மறைப்பதற்காக சீனாவு உள்ளே நுழைந்து விடுமே என்பதால் உதவிகள் செய்தோம் என்ற சொத்தை வாதத்தை வைக்கிறது இந்தியா.
தனி தமிழ் ஈழம் உருவாவதை உண்மையில் இந்தியா விரும்பவில்லை. தனி ஈழம் உருவானால், இந்தியாவில் தனி நாடு கோரிக்கைகள் பெருமளவில் தலை தூக்கி விடும் என்ற அச்சமே அதற்குக் காரணம்.
மத்தியிலும், தமிழகத்திலும் உள்ள ஆட்சிகள், இலங்கை இனப் பிரச்சினையை கால்பந்து விளையாட்டாக மாற்றி விட்டன. இதில் பந்தாக மாறி உதைபட்டு நிற்பவர்கள் அப்பாவி ஈழத் தமிழர்கள்தான் என்றார்.
-
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம்












Click it and Unblock the Notifications