102வது முறை தேர்தலில் போட்டியிடும் பத்மராஜன்

Subscribe to Oneindia Tamil

Padmarajan
கிருஷ்ணகிரி: தேர்தல் மன்னன் கே. பத்மராஜன், 102-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். பர்கூர் இடைத் தேர்தலில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் ஐந்து தொகுதிகளிலும் மொத்தம் 5 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர்.

பர்கூர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் தேர்தல் மன்னன் பத்மராஜன், தேர்தல் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் சண்முக சுந்தரத்திடம் மனு தாக்கல் செய்தார். இதேபோல மனிதன் என்பவரும் மனு தாக்கல் செய்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் பத்மராஜன். இவர் குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், மாநில முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு சாதனை படைத்தவர். லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றவர்.

இதுவரை 101 முறை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது 102வது முறையாக போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிட்டு இது வரை சுமார் ரூ.10 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் தொகையை
இழந்துள்ளார்.

மேலும், உலகத்திலேயே 100 முறைக்கு மேல் போட்டியிட்டதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+