காந்தியின் தெ. ஆப்பிரிக்க வீடு - வாங்க கோல் இந்தியா நிறுவனம் விருப்பம்

இதுகுறித்து கான்பூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்ன விலையாக இருந்தாலும் சரி வீட்டை வாங்குமாறு நிலக்கரித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோல் இந்தியா நிறுவனம் இந்த வீட்டை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளது.
கோல் இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள் வருகிற 17ம் தேதி ஜோஹன்னஸ்பர்க் சென்று அந்த வீட்டைப் பார்வையிடவுள்ளனர். அவர்களுடன் நானும் செல்லவுள்ளேன்.
ஒருவேளை இந்த வீட்டை இந்திய வம்சாவளியினர் அல்லது வேறு இந்திய நிறுவனம் வாங்க முடிவு செய்திருந்தால், இந்த வீட்டை வாங்கும் முடிவிலிருந்து கோல் இந்தியா பின்வாங்கும்.
தேசத் தந்தை வசித்த வீட்டை நினைவகமாக காக்க வேண்டியது நமது கடமை. இதனால் இத்தகைய முயற்சியை கோல் இந்தியா மேற்கொண்டுள்ளது என்றார்.
மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பரும், பிரபல கட்டடக கலை நிபுணருமான ஹெர்மான் காலென்பாக் இந்த வீட்டை வடிவமைத்துக் கொடுத்தார். முற்றிலும் ஓடுகளால் வேயப்பட்டது இந்த வீடு.
இந்த வீட்டில் 1908-ம் ஆண்டு முதல் 1909-ம் ஆண்டு வரை காந்தி வசித்துள்ளார். இனவெறிக்கெதிராக போராடும் வழக்கறிஞராக அவர் பணியாற்றியபோது இங்கு வசித்தார்.
தற்போது இந்த வீடு நான்சி பால் என்ற பெண்மணியிடம் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக இந்த வீட்டில் வசித்து வருகிறார் நான்சி.
தற்போது கேப்டவுனுக்கு அவர் இடம் பெயரவுள்ளதால் வீட்டை விற்க முடிவு செய்துள்ளார். வீட்டின் விலை 3.5 லட்சம் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதிக விலை என்று கூறி யாரும் வீட்டை வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
சமீபத்தில், இந்த வீட்டை வாங்க காந்தியின் கொள்ளுப்பேத்தியான கீர்த்தி மேனன் ஆர்வம் தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications