கூடங்குளம் அணு மின் நிலைய திட்ட இயக்குநருக்கு பதவி உயர்வு
வள்ளியூர்: கூடன்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குநர் கே.சி.புரோஹித், பதவி உயர்வுடன் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கூடன்குளத்தில் ரஷ்யநாட்டு உதவியுடன் சுமார் 13 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அணு உலைகளின் தொழில்நுட்பத்திற்கும், அதன் கட்டுமானப்பணிகளுக்கும் இவர் பொறுப்பாக இருந்து வந்தார் புரோஹித்.
தற்போது இவர் மும்பையில் உள்ள இந்திய அணுமின் உற்பத்தி கழக இயக்குனராக (திட்டம்) பதவி உயர்வு பெற்றுள்ளார். கூடன்குளம் அனுமின் நிலையத்தில் நிலைய இயக்குனராக அங்கு தலைமை கண்காணிப்பு பொறியாளராக இருந்த எம்கே பாலாஜி நிலைய இயக்குனராக பொறுபேற்க உள்ளார்.
பதவி உயர்வு பெற்றுள்ள கேஎம் பிரோகித் மற்றும் எம்கே பாலாஜிக்கு இந்திய அணுசக்தி துறை உயர் அதிகாரிகள், உடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.