Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Subscribe to Oneindia Tamil

Lakhs of devottees witness Soora samharam in Thiruchendur
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.

இதேபோல, வட பழனி, கந்தகோட்டம் உளளிட்ட கோவில்களிலும் சூரசம்ஹாரம் நடந்தது.

கந்த சஷ்டியின் உச்ச கட்டமான சூரசம்ஹாரம் திருச்செந்தூர் உள்பட முருகன் கோவில்களில் நேற்று மாலை நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 18ம் தேதி தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நேற்று மாலை கோயில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதையொட்டி நேற்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பாரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூரனை வதம் செய்து ஆணவம் அழியும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய சூரசம்ஹார விழா தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்து பரவசம் அடைந்தனர். அரோஹரா கோஷம் விண்ணைப் பிளந்தது.

சூரசம்ஹாரத்திற்குப் பின்னர் 6 நாட்களும் கடும் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் கடலில் நீராடி பானகம் அருந்தி விரதத்தை நிறைவு செய்தனர். இரவு 108 மகாதேவர் சன்னதியில் சாயாபிஷேகம் எனப்படும் நிழல் அபிஷேகம் நடைபெற்றது.

வடபழனி முருகன் கோவிலில் தெற்கு கோபுர வாசலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவையொட்டி நேற்று அதிகாலையில் முருகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. மதியம் 12 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற்றது.

சூரசம்ஹார நிகழ்ச்சி சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. முடிவில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்டு முருகனை தரிசிப்பதற்காக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடபழனிக்கு வந்திருந்தனர்.

இதேபோல பூங்காநகர் கந்தகோட்டம் கந்தசாமி கோவிலிலும் சூர சம்ஹார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+