இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றார் கே.ராதாகிருஷ்ணன்
திருவனந்தபுரம்: பிரபல விஞ்ஞானி கே.ராதாகிருஷ்ணன், இஸ்ரோ தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தான் இயக்குநராகப் பணியாற்றி வந்த திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திலேயே இஸ்ரோ தலைவராக அவர் பொறுப்பேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இஸ்ரோ தலைவராக நான் பொறுப்பேற்றுள்ளேன். இதற்கு முன்பு நான் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில் மிகப் பெரிய பொறுப்பு இது என்று கூறியிருந்தேன். என் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் இருப்பதாக தெரிவித்திருந்தேன். அனைத்தையும் நான் சிறப்பாக செய்வேன். அனைத்துப் பணியாளர்களின் ஆதரவுடன் இஸ்ரோவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பாடுபடுவேன் என்றார்.
முன்னதாக மாதவன் நாயர் இஸ்ரோ தலைவராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரது பதவிக்காலத்தில் இஸ்ரோ 25 விண்வெளிச் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிகழ்த்தியது. இதில் சந்திரயான்-1 விண்கலம் மிக முக்கியமானதாகும்.












Click it and Unblock the Notifications