2010ல் சனி, ஞாயிறுகளில் பண்டிகைகள்- அரசு ஊழியர்கள் ஏமாற்றம்
நெல்லை: தமிழக அரசின் 2010ம் ஆண்டு பொது விடுமுறை அறிவிப்பில் 10 விடுமுறை நாட்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வருவதால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வரும் 2010ம் ஆண்டில் 24 நாட்கள் அரசு பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் பத்து நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த பத்து நாட்களில், ஜனவரி 16 உழவர் திருநாள், பிப்ரவரி 27 மிலாது நபி, மே தினம், செப் 11 விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 16 ஆயுத பூஜை, டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் ஆகிய 7 பண்டிகைகள் சனிக் கிழமையில் வருகின்றன.
மார்ச் 28 மகாவீர் ஜெயந்தி, ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 17 விஜயதசமி, ஆகிய 3 தினங்கள் ஞாயிற்று கிழமைகளில் வருகின்றன.
தமிழகத்தில் பள்ளிகள், தாலுகா அலுவலகங்கள், உள்ளாட்சி துறை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு, மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் ஏற்கனவே விடுமுறை அளித்து வருகின்றன.
அதே தினங்களில் மேற்குறிப்பிட்ட 10 பண்டிகை நாட்கள் வருவதால் அரசு, தனியார் துறை ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.