தினக்கூலித் தொழிலாளர் வீட்டுக் குழந்தைகளுக்கு தலைவர்கள் பெயர்கள்

ஏதோ கனவில் நடக்கும் காட்சியோ என்று சந்தேகம் வரலாம். ஆனால் உண்மையான நிகழ்ச்சிதான் இது. இருப்பினும் பெயர்கள் மட்டும்தான் நமக்குத் தெரிந்தவை - இந்த பெயர்களுக்குரியவர்கள் குழந்தைகள் என்பதுதான் புதிய விஷயம்.
உ.பி. மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டம் ஜாலபூர் நகரைச் சேர்ந்தவர் மித்தாய் லால் (45). இவருடைய மனைவி பெயர் சந்திரசேனா (42). இவருக்கு மொத்தம் 7 குழந்தைகள். ஏழு பேருக்கும் பிரபல அரசியல் தலைவர்களின் பெயர்களை சூட்டியுள்ளார் மித்தாய் லால்.
இப்படி பிரபலமானவர்களின் பெயர்களை சூட்டினால் அவர்களும் நாளைக்கு பெரிய அளவுக்கு வளருவார்கள் என்ற நம்பிக்கையில் இவ்வாறு வித்தியாசமாக பெயர் சூட்டியுள்ளார் மித்தாய் லால். தற்போது சந்திரசேனா மறுபடியும் கர்ப்பமாக உள்ளாராம். அந்தக் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் மாயாவதி என பெயர் சூட்டுவார்களாம்.
இதுகுறித்து மித்தாய் லால் கூறுகையில், எனக்கு ஆறு மகன்கள், ஒரு மகள். ஆறு மகன்களுக்கும் பிரபலமான தலைவர்களின் பெயர்களைச் சூட்டியுள்ளேன். ஒரே மகளுக்கு ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டியுள்ளேன். இன்னொரு மகள் பிறந்தால், மாயாவதி என்று பெயரிடுவேன்.
இந்தப் பிரபலமான தலைவர்களின் பெயர்களால் எனது பிள்ளைகளும் நாளை நல்ல நிலைக்கு வருவார்கள். அனைவராலும் அறியப்படுவார்கள் என்கிறார்.
மித்தாய் லால் தம்பதியின் குழந்தைகளிலேயே மூத்தவர் முலாயம் சிங் தான். இவருக்கு 18 வயதாகிறது. இளையவர் பால் தாக்கரே. இவர் பிறந்து ஐந்து மாதங்களே ஆகிறதாம்.
கல்யாண் சிங்க்கு 16 வயதாகிறது. கியானி ஜெயில் சிங்குக்கு 15, ராஜ்நாத் சிங்குக்கு 13, மன்மோகன் சிங்க்கு 5 வயதாகிறது. ஒரே மகள் ஜெயலலிதாவுக்கு 8 வயதாகிறது. ஜெயலலிதாவுக்கு பால் தாக்கரே என்றால் உயிராம்.
தற்போது சந்திரசேனா மறுபடியும் கர்ப்பமாக உள்ளார். ஐந்து மாதங்களில் குழந்தை பிறக்கவுள்ளதாம். நிச்சயம் பெண்தான் பிறக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
தலித் சமூகத்தில் பிறந்த மாயாவதி பல்வேறு தடங்கல்கள், இடையூறுகளை மீறி சாதனை படைத்தது போல தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தனக்குப் பிறக்கப் போகும் மகளும் வருங்காலத்தில் சாதனை படைத்து பெருமை சேர்ப்பாள் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மித்தாய் லால்.
பிள்ளைகளில் மூத்தவரான முலாயம் சிங் படு பொறுப்பாக உள்ளார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அக்கம் பக்கத்து சிறார்களுக்கு டியூஷன் எடுத்து சம்பாதிக்கிறாராம்.
மித்தாய் லாலின் பிள்ளைகளைப் போல அவர்களின் பெயர்களுக்குரிய அரசியல் தலைவர்களும் ஒற்றுமையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications