தொல்காப்பியரின் காலம் கி.மு. 711
காரைக்குடி: தொல்காப்பியரின் காலம் கி.மு. 711 என்று சிவகங்கை மாவட்டம் கோவிலூர் திருமடத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவிலூர் திருமடமும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்திய தொல்காப்பியர் கால ஆராய்ச்சிக் கருத்தரங்கை நடத்தின.
தொல்காப்பியரது காலம் பற்றி பல ஆண்டுகளாக தமிழறிஞர்கள் மத்தியில் இருவேறு கருத்துகள் இருந்து வந்தன. அவரது காலம் குறித்து பல்வேறு ஆய்வுக் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன.
கடந்த மூன்று ஆண்டுகளாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்திய முப்பதுக்கும் மேற்பட்ட தொல்காப்பியக் கருத்தரங்கங்களில் தொல்காப்பியரின் காலத்தையும் நாளையும் வரையறை செய்துள்ளனர்.
கோவிலூர் திருமடத்தில் மூன்று நாள்கள் நிகழ்ந்த திருவள்ளுவர் ஆண்டு கருத்தரங்கில், அறிஞர் பலரால் ஆய்வு செய்யப்பட்டு, தொல்காப்பியர் நாளும், கால எல்லையும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சித்திரைத் திங்கள் முழுமதி நாள் "சித்திராப் பெÜர்ணமி' என்றும் அவரது கால எல்லை கி.மு. 711 (ஆண்டு 2721) என்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், புதன்கிழமை மாலை அதங்கோட்டாசான் இருக்கை, ரோட்டரி அரங்கம் மேல்தளத்தில், தொல்காப்பியர் தமிழ்ப் பெருவிழா நடைபெறுகிறது.
தொல்காப்பியர் கோட்பாடுகள் குறித்த கருத்தரங்கம் பிற்பகல் 4 மணி அளவில் முனைவர் கு.சிவமணி தலைமையில் நடைபெறுகிறது. இதில் தொல்காப்பியரின் திருவுருவப் படத்தை புலவர் த. சுந்தரராசன் திறந்து வைக்கிறார். முனைவர்கள் பெ.சுயம்பு, இரா. காசிராஜன் போன்றோர் ஆய்வுரை நிகழ்த்துகின்றனர்.
தொல்காப்பியர் காலம் குறித்த இத்தீர்மானத்தை தமிழக அரசு ஏற்று, உலகச் செம்மொழி மாநாட்டில் தொல்காப்பியர் காலம் கி.மு.711 என்றும், அவரது நாள் அந்த ஆண்டின் சித்திரைத் திங்கள் முழுமதி நாள் (சித்திராப் பெளர்ணமி) என்றும் அறிவித்து, தொல்காப்பியர் புகழை நிலைபெறச் செய்யவேண்டும் என்று தமிழ்ச் சான்றோர் சார்பாக, பேராசிரியர் கு. சிவமணி, பேராசிரியர் தமிழண்ணல் மற்றும் ஆறு. அழகப்பன் போன்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications