பாளையங்கோட்டை-11ம் தேதி வீரன் அழகுமுத்துகோன் சிலை நிறுவும் விழா

Subscribe to Oneindia Tamil

நெல்லை: பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் வீரன் அழகுமுத்துகோன் சிலை வருகிற 11ம் தேதி நிறுவப்படும் என்று யாதவ மகாசபை தலைவர் தேவநாதன் கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் 1 கோடியே 10 லட்சம் யாதவர்கள் உள்ளனர். அதில் 60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலில் யாதவர்களுக்கு சுமார் 25 சீட்டுகளுக்கு குறையாமல் வழங்கும் எந்த கட்சியையும் ஆதரிப்போம்.

கடந்த ஏப்ரல் மாதம் நெல்லையில் நடந்த முதல் மாநில மாநாட்டில் வீரன் அழகுமுத்துகோன் சிலையை திறந்து வைத்தோம். ஆனால் எங்களுக்கு வீரன் அழகுமுத்துகோன் சிலையை திறப்பதற்கு அரசு அனுமதி ஆணை உடனடியாக வழங்காமல் கடந்த மே மாதம் 3ம் தேதிதான் வழங்கியது.

இதனால் வரும் 11ம் தேதி வீரன் அழகுமுத்துகோன் ஜெயந்தி நாளான்று மாலை 4 மணிக்கு பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் அரசு அனுமதி வழங்கிய இடத்தில் சிலை நிறுவும் விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் சுமார் 2 லட்சம் யாதவர்கள் கலந்து கொள்வார்கள். இதையொட்டி அன்று காலை வீரன் அழகுமுத்துகோன் பிறந்த தூத்துக்குடி மாவட்டம் கட்டலாங்குளத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் வீரன் அழகுமுத்துகோன் ஜெயந்தி விழா நடக்கும்.

பிறகு கட்டாலங்குளத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு சுமார் 2,000 வாகனங்களில் என்னுடைய தலைமையில் நடைபெறும் வீரன் அழகுமுத்துகோன் சிலை நிறுவும் விழாவில் கலந்து கொள்வார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+