கள்ளழகரின் தங்கக் குதிரை 10 கிலோ தங்கத்தில் புதுப்பிப்பு
அழகர்கோவில்: பக்தர்களின் 10 கிலோ காணிக்கை தங்கத்தை உருக்கி கள்ளழகரின் தங்கக் குதிரை வாகனத்தை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் கள்ளழகர், தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளுவார்.
தற்போது இருக்கும் தங்கக் குதிரை பல நூறு ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டது. குதிரையில் மேல் பூசப்பட்ட தங்க முலாம் பொலிவிழந்து தாமிரத் தகடுகள் தெரிகின்றன.
தற்போது கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகின்றன. மூலவர் தங்க விமானத்திற்கு புதிதாக தங்க முலாம் பூசும் பணி நடக்கிறது. இத்துடன் தங்கக் குதிரையையும் புதுப்பிக்க அறநிலையத் துறை ஆணையரிடம் உத்தரவு பெறப்பட்டது.
புதிய குதிரைக்கு தேவையான தங்கத்தை கோவிலில் பக்தர்கள் செலுத்திய தங்கத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும்படி ஆணையர் சம்பத் உத்தரவிட்டார்.
அதன்படி பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 10 கிலோ தங்கம் கோவிலில் இருப்பு உள்ளது. கோவில் தங்கத்தை மும்பையில் உள்ள அரசு உருக்காலையில் உருக்கி 24 காரட் தங்கமாக மாற்றுவதற்காக கோவில் நிர்வாகிகள் மும்பைக்கு புறப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications