பொங்கல் பண்டிகை-180 சிறப்பு ரயில்களை இயக்கும் தென் மத்திய ரயில்வே
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தென் மேற்கு ரயில்வே 180 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது.
தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் சங்கராந்தி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இந்த மூன்று மாநிலங்களிலும் உள்ளவர்களின் வசதிக்காக இந்த சிறப்பு ரயில்களை தென் மத்திய ரயில்வே இயக்குகிறது.
இந்த சிறப்பு ரயில்களில் ஏசி டூ டயர், ஒரு ஏசி 3 டயர், 8 படுக்கை வசதிப் பெட்டிகள், 6 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் இருக்கும். டிசம்பர் 1ம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு ரயில்கள் ஜனவரி 19ம் தேதி வரை இயக்கப்படுகின்றன.
ஜனவரி 15ம் தேதியன்று உலகத் தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகவும் தற்போது கொண்டாடப்படுவதால் பொங்கலை இரட்டிப்பு தித்திப்புடன் தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.












Click it and Unblock the Notifications