சென்னையில் அனைத்து சமய சமத்துவப் பொங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னையில், அனைத்து சமயத்தினரும் கலந்து கொண்ட சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

சென்னை முகப்பேரில் உள்ள ஜஸ்வந்த் நகர் பூங்காவில் நேற்று நடந்தது இந்த வித்தியாசமான பொங்கல் திருவிழா. இதற்கு முகப்பேர் பேட்மின்டன் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. பொங்கலிடுவது மட்டுமல்லாமல், கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் களை கட்டியிருந்தன.

கோலப் போட்டி, மண்பானையில் பொங்கலிடுவது, மாட்டு வண்டி ஊர்வலம், உரியடி, கயிறு இழுத்தல் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

மேலும், மானாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், நாற்று நடும்போது பாடும் நடவுப் பாடல்கள் ஆகியவையும் இடம் பெற்று அனைவரின் மனங்களையும் மண்வாசனை கமழும் கிராமங்களுக்கு இட்டுச் சென்றது.

நிகழ்ச்சியில், தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை ஆணையர் மணி, புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+