அமெரிக்க தமிழ் சங்கத் தலைவருக்கு சென்னையில் பாராட்டு விழா
மதுரை: கரோலினா தமிழ் சங்கத் தலைவர் சுந்தர் செயபாலனுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளை, தமிழ் எழுச்சிப் பேரவை ஆகியவை சார்பில் கரோலினா தமிழ் சங்கத் தலைவர் சுந்தர் செயபாலனுக்குச் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் தமிழ் எழுச்சிப் பேரவையின் செயலாளர் முனைவர் பா.இறையரசன், மறைமலை அடிகளாரின் பேரன் மறை திருநாவுக்கரசு, திரைப்படக் கவிஞர்கள் அண்ணாமலை, பூவை வாலறிவன், சித்த மருத்துவர் கவிஞர் பொ.அ.அரசக்குமரன் (ராஜ் குமார்), உணர்ச்சிக் கவிஞர் தஞ்சை கோ.கண்ணன், வத்திரா இருப்பு தெ.சு. கவுதமன், கவிஞர்கள் எழில் வேந்தன். தனித்தமிழ் வேங்கை மறத்தமிழ் வேந்தன் ஆகியோரும் பேசினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கச்சத்திவை மீட்கவும் ஈழத்தமிழரைக் காக்கவும், மூவர் உயிர் காக்கவும் கொண்டு வந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானங்களை கரோலினா தமிழ்ச்சங்கம், உலகதமிழர்கள் அமைப்பு, தமிழர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications