செப்டம்பர் 9ல் ஓணம்- களை கட்டுகிறது கன்னியாகுமரி
மார்த்தாண்டம்: ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுடன் குமரி மாவட்ட மக்களும் தயாராகி வருகின்றனர். செப்டம்பர் 9ம் தேதி திருவோணம் கொண்டாடப்படுகிறது.
கேரள மக்களின் முக்கியமான பண்டிகை ஓணம், கன்னியாகுமரி மாவட்ட மக்களும் ஓணம் பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடி வருகின்றனர். கேரள மற்றும் குமரி மாவட்ட மக்கள் வசந்த கால விழாவாக திருவோணத்தை கொண்டாடுகின்றனர்.
அத்தம் பிறந்ததும ஓணத்தை கொண்டாட பொதுமக்கள் தயாராகின்றனர். அத்தம் நட்சத்திரத்தில் இருந்து பத்தாவது நாள் திருவோண நட்சத்திரம். அத்தம் பத்தினு பொன்னோணம் என்று கேரள மகிழ்ச்சியாக கூறுவார்கள்.
ஓணம் பண்டிகைக்கு பத்து நாட்களும விதவிதமான பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு புத்தாடை அணிந்து விதவிதமான உணவு பாததர்த்தங்களுடன் உற்சகமான ஊஞ்சலாட்டம், ஓணப்பந்து, படகு போட்டி, போன்ற பல்வேறு விளையாட்டுகளுடன் மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். பத்து நாட்களும் பிறவற்றை மறந்து ஓணம் கொண்டாடத்துக்கு முக்கியதுவம் கொடுப்பார்கள்.












Click it and Unblock the Notifications