எனக்கென நீ வந்தாய் ….
Subscribe to Oneindia Tamil

என் உயிரில் கலந்தவனே !
சூரியனை நான் கேட்டேன்….
குளிர் நிலவாய் நீ வந்தாய் !
கோடையை நான் கேட்டேன்….
வசந்தமாய் நீ வந்தாய் !
பாலையை நான் கேட்டேன்….
சோலையென நீ வந்தாய் !
கடும் மழையை நான் கேட்டேன்….
தூவானமாய் நீ வந்தாய் !
வண்ணங்களை நான் கேட்டேன்….
ஓவியமாய் நீ வந்தாய் !
கண்ணீரை நான் கேட்டேன்….
புன்னகையை நீ கொடுத்தாய் !
முட்களை நான் கேட்டேன்….
பூக்களை நீ பரிசளித்தாய் !
தனிமையில் நின்றிருந்தேன்…
துணையென நீ வந்தாய் !












Click it and Unblock the Notifications