திருச்செந்தூர் கோயில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம் - 18ல் தேரோட்டம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலி்ல் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் மாசி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு திருவிழா இன்று (9ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 20-ம் தேதி வரை நடக்கிறது. வரும் 18-ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டி தினமும் சுவாமி-அம்பாள் காலை, மாலை வீதி உலாவும், கோயில் கலை அரங்கில் சொற்பொழிவு, இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
மாசி திருவிழாவின் முன்னோடியாக நேற்று காலை மேலசிவன் கோவிலில் கணபதி ஹோமம் நடந்தது. இதைத் தொடர்ந்து முகூர்த்த பட்டோலை வாசிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அறங்காவலர் சந்திரசேகரன், கண்காணிப்பாளர் செல்வகுமாரி ஆகியோர் சண்முக சுந்தர சிவாச்சாரியாரிடம் முகூர்த்தப் பட்டு தாம்பூலத்தை கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications