அம்மாவின் அருமை
Subscribe to Oneindia Tamil
- மயூரா அகிலன்
பிறந்த வீட்டை விட்டு
புகுந்த வீடு போகும் வரை
தெரியவில்லை
அம்மாவின் அருமை…
எட்டு மணிவரை தூங்கினாலும்
எழுப்ப யோசித்த
அம்மாவின் அருமை
ஐந்து மணிக்கு
அலாரம் அடித்தபோது
தெரிந்தது…
படித்த புத்தகத்தை
படுக்கையிலே போட்டாலும்
பார்த்து எடுத்து வைத்த
அம்மாவின் அருமை
எதையும் எடுத்த இடத்தில்
வைக்க வேண்டும்
என்ற போது புரிந்தது…
பசித்த நேரத்தில்
சோறூட்டிய
அம்மாவின் அருமை
பத்துப்பாத்திரம் தேய்க்கையில்
தெரிந்தது…
என்னை பத்து மாதம்
சுமந்த அம்மாவின் அருமை
எனக்கு குழந்தை பிறக்கையில்
முற்றிலும் புரிந்தது.












Click it and Unblock the Notifications