இன்று துபாயில் புஷ்ரா நல அறக்கட்டளையின் 15வது ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் புஷ்ரா நல அறக்கட்டளையின் 15வது ஆண்டு துவக்க விழா மற்றும் மலர் வெளியீட்டு விழா 06.04.2012 அன்று மாலை 7 மணிக்கு தேரா கோட்டைப் பள்ளி அருகிலுள்ள அல் காமிஸ் முஹம்மது உணவகத்தில் நடைபெறுகிறது. இந்த தகவலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வி.களத்தூர் கமால் பாஷா தெரிவித்தார்.
சீனா தானா அறக்கட்டளையின் நிறுவனரும், ஈ.டி.ஏ. ஸ்கைசீ இயக்குநருமான அல்ஹாஜ் செய்யது எம். அப்துல் காதர், ஈமான் அமைப்பின் இணைப் பொது செயலாளர் அல்ஹாஜ் ஏ. முஹம்மது தாஹா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் எஸ். சதக்கத்துல்லா 050 53 566 05 / ஏ. ஷாகுல் ஹமீது 055 293 84 76 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications