துபாயில் கேரளா பிரிமீயர் லீக் துவக்க நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியில் கேரளா பிரிமீயர் லீக்கின் பிராண்ட் அம்பாஸிடர்களான நடிகர் பரத் சுரேஷ் கோபி, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், நடிகை பாமா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் மூவரும் நிகழ்ச்சியின் இறுதியில் தமிழில் பாடல் பாடி பார்வையாளர்களை அசத்தினார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்திமாலா சுரேஷ் மூவரையும் பாராட்டினார். மேலும் கேரளத்தவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழில் பாடக் காரணம் என்ன என்று அவர் கேட்டதற்கு, தமிழின் இனிமை காரணமாக அது மனதை கொள்ளை கொள்ளக்கூடியதால் பாடியதாகத் தெரிவித்தனர்.
மேலும் கேராளா பிரிமியர் லீக்கின் அணிகளில் தமிழர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையறிந்த ஜெயந்திமாலா சுரேஷ் எதிர்காலத்தில் கேரளா தமிழ்நாடு பிரிமியர் லீக் என்று அணியின் பெயரை மாற்றிட அதன் நிர்வாகத்தினரைக் கேட்டுக் கொண்டார்.













Click it and Unblock the Notifications